மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுகவினர் கைது.!
மதுரை

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு தலைமையில் ஜனநாயக வழியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கைது செய்து செல்லூர் திருமண மஹாலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனை அறிந்து மாநில தலைமையின் அறிவுறுத்தலின் அடிப்படையில் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், துணைத் தலைவர் ஜாபர் சுல்தான் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தங்களது ஆதரவினை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்கள்.