முன்னாள் எம்.எல்.ஏ.வும் திமுக கொள்கையாளருமான இராம சந்திரனை சந்தித்து உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !

சென்னை

முன்னாள் எம்.எல்.ஏ.வும் திமுக கொள்கையாளருமான இராம சந்திரனை சந்தித்து உரையாற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். !

சென்னை அண்ணா நகரில் முன்னால் எம்.எல்.ஏ இராமசந்தினை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கொள்கை நெறி தவறாத பாதையில், கடும் உழைப்பால் முன்னேறியவரும் -  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நூறாண்டுகளைக் கடந்து கழகத்தின் மூத்த முன்னோடியாக நமக்கெல்லாம் திசைகாட்டியாக வாழ்பவருமான சோ.மா.இராமச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி பகுதியில் பிறந்து, பின்னர் சென்னையில் குடியேறி, தேநீர்க் கடை ஒன்றை நடத்தி, தனது உழைப்பால் உயர்ந்த இராமசந்திரன், திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கழகத்தில் இணைந்து பணியாற்றியவர். மிசாவில் சிறை கண்டவர். 30 ஆண்டுகாலம் பகுதிச் செயலாளர், ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர் என மக்கள் தொண்டாற்றி அண்ணா நகர் வாழும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் இராமச்சந்திரன்.

பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவர். தலைவர் கலைஞர் - பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டபோது, அவர்களது வெற்றிக்காகக் களப்பணியாற்றியவர்.

முன்னத்தி ஏராகக் கழகத்தினருக்கு வழிகாட்டும் சோ.மா.இராமச்சந்திரன் அவர்கள் நீடு வாழ்க பல்லாண்டு எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )