உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் .!
தமிழகம்

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்பு .
இன்று உயர் நீதிமன்ற வாயிலில் நடைபெற்ற சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் தலைமை நிலைய செயலாளரும் வழக்கறிஞருமான ஜெயினுலாபுதீன் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தார்.
மேலும் இந்நிகழ்வில் மனிதநேய வழக்கறிஞர் சங்கத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மாவட்ட
வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)