உடலுறவை பட்டை, நாமத்துடன் ஒப்பிட்ட பொன்முடியின் ஆபாச பேச்சினால் கட்சி பதவி பறிப்பு.!

தமிழகம்

உடலுறவை பட்டை, நாமத்துடன் ஒப்பிட்ட பொன்முடியின் ஆபாச பேச்சினால் கட்சி பதவி பறிப்பு.!

உடலுறவை பட்டை, நாமத்துடன் ஒப்பிட்ட பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு கனிமொழி கண்டனம்! 

மேலும் அமைச்சர் பொன்முடியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிப்பு.!

சைவ, வைணவ சமயங்களின் குறியீடுகளை உடலுறவு உடன் ஒப்பீட்டு பேசிய அமைச்சர் பொன்முடிக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம் தெரிவித்து உள்ளார்.மேலும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியை பறித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பொன்முடியின் சர்ச்சை பேச்சு

தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி "தப்பா நினைச்சுக்காதீங்க மகளிர். ஒரு விலைமாது வீட்டுக்கு ஒருத்தன் போறான். போகும்போது அங்க அந்த அம்மா கேக்குது, 'நீங்க சைவமா வைணவமா?' அப்படின்னு கேக்குது. அவனுக்கு ஒன்னும் புரியல. அவன், 'பணம் எவ்வளவு? அஞ்சு குடு, பத்து கொடு'ன்னு கேட்டான்னா, 'ரைட், என்னடா இங்க வந்துருக்கறோம்? நாம ஒரு விலைமாது வீட்டுக்கு வந்து, சைவமா வைணவமான்னு கேக்குறாங்க' அப்படின்னு கேட்டான். அந்த அம்மா சொல்லிச்சு, சைவம்னா படுத்துக்கிறது, வைணவம்னா நின்னுக்கிறது. நின்னா அஞ்சு, படுத்தா பத்து'ன்னு சொன்னா" என பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கனிமொழி கண்டனம்

இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. திமுக துணை பொதுசெயலாளரும், எம்.பியுமான கனிமொழி பொன்முடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், "அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என தெரிவித்து உள்ளார்.