துப்புரவுப் பணியாளர்களுக்கு அதியமான் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.!
கிருஷ்ணகிரி

மல்லப்பாடி கிராமத்தில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அதியமான் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், அதியமான் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவிகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விவசாயம் சார்ந்த களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடி கிராமத்தில்
விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து விவசாயிகளுக்கு எந்த மாதிரியான பயிர்களை சாகுபடி செய்தால் எவ்வாறு அதிகம் மகசூல் பெற முடியும், பயிர்களை தாக்கும் பூச்சிகளில் இருந்து எவ்வாறு பயிர்களை காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்து வருகின்றனர்,
இதன் ஒரு பகுதியாக உலக சுகாதாரத்தினைத்தினை முன்னிட்டு மல்லப் பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்வதும் குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்,
மேலும் மல்லப்பாடி கிராமத்தில் துப்புரவு பணியில் மேற்கொண்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு கல்லூரி மாணவிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்,
தொடர்ந்து அவர்களுக்கு முககவசம் மாட்டுமின்றி கை உறைகளையும்
வழங்கி சுகாதார குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, துப்புரவு பணியின் போது கட்டாயம் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்துதான் பணிகள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்கள் அப்போது கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ