எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் திறன் மிக்க தலைவர்களை உருவாக்கும் நோக்கில் தேசியஅளவில் நடைபெறும் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி

தஞ்சாவூர்

எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் திறன் மிக்க தலைவர்களை உருவாக்கும் நோக்கில் தேசியஅளவில் நடைபெறும் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி

தஞ்சை தெற்கு மாவட்டம், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் திறன் மிக்க தலைவர்களை உருவாக்கும் நோக்கில் தேசம் தழுவிய அளவில் நடைபெறும் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி மற்றும் தலைமைத்துவ பயிற்சி முகாம் மல்லிப்பட்டினம் ஜும்மா பள்ளி மதரஸாவில்  தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமையில்  நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட பொது செயலாளர் முஹம்மது புஹாரி அனைத்து நிர்வாகிகளையும் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் நிஜாமுதீன் தலைமையுரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ரியாஸ் அஹமது, தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன், தமிழ் மாநில பேச்சாளர் வழக்கறிஞர் ஆவூர் அன்சாரி மற்றும் தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் பயிற்சி வகுப்புகள் எடுத்தனர். 

மாவட்டம் முதல் தொகுதி நகர கிராம பஞ்சாயத்து மற்றும்  கிளை வரை உள்ள தலைவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டது.

 இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மதுக்கூர் நகர நிர்வாகிகள், அதிரை நகர நிர்வாகிகள், சேதுபாவா சத்திரம் ஒன்றிய நிர்வாகிகள், மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள்,  பட்டுக்கோட்டை கிளை, மதுக்கூர் கிளைகள், அதிரை கிளைகள், மல்லிப்பட்டினம் கிளைகள், சத்திரம் கிளை, சம்பை கிளை, செந்தலை கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் அகமது அஸ்லம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

செய்தியாளர்

அசாருதீன்