நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.!
அரசியல்

26 ஆண்டுகள் சீமானுடன் பயணித்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Subscribe YouTube
https://youtu.be/lhqmqZcSLzg?si=FiJvpHr5fODaV0W9
அனைத்திலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று மேடையில் பேசும் சீமான், கட்சியின் பொதுக்குழுவில் அறிவிக்காமலேயே வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஆர்.எஸ்.எஸ். தாக்கம் கொண்டவரை பொதுச்செயலாளராக நியமித்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படுகிற பணம், தலைமை அலுவலகத்தில் இருப்பவர்களால் ஊதாரித்தனமாக செலவு செய்யப்படுவதாக ஜெகதீச பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக, கட்சி பணத்தை எடுத்து வட்டிக்கு விடுவது, புதிய வாகனம் வாங்குவது, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவது வாடிக்கையாய் இருப்பதாக தனது கடிதத்தில் ஜெகதீச பாண்டியன் குறிப்பிட்டுள்ளார். நிர்வாக ரீதியான சிக்கலை கூட சரி செய்து விடலாம் என காத்திருந்த சமயத்தில், சீமான் கொள்கையிலேயே முரண்பட்டு நிற்பதாக ஜெகதீச பாண்டியன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அடிக்கடி குருமூர்த்தியை சந்தித்த சீமான், அவரது வழிகாட்டுதலின் பேரில், பெரியாரையும், பிரபாகரனையும் எதிர் எதிராக நிறுத்துவது, தமிழ்நாட்டில் தமிழர் அரசியல் வளர்ச்சி பெறாமல் இருக்க சங்பரிவார் கும்பலின் சதித்திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரபாகரனின் குடும்பத்திற்கே மரியாதை கொடுக்காத சீமான், மற்றவர்களுக்கு எப்படி மரியாதை கொடுப்பார் என்று வினவியுள்ளார்.
வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் சீமான் பேசும் அரசியலின் பெயரால், இனியும் தமிழ் தேசியத்திற்கு துரோகம் செய்ய முடியாது என்று ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார். சங்கியாகவும் செயல்பட முடியாது என்ற காரணத்தால், உயிருக்கு உயிராக நேசித்து வளர்த்த கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்ட சீமானால், வலதுசாரி சிந்தனையோடு ஒரு காலத்திலும் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியாது எனவும் ஜெகதீச பாண்டியன் தெரிவித்துள்ளார்.