தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025-26 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை.!
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2025-26 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை
மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்
தென்காசி ஏப்ரல் 23
தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்2025-26 ஆண்டிற்கான விளையாட்டு விடுதிகளில் மாணவ மாணவியர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவதுபள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன விளையாட்டு விடுதி சேர்க்கைகான விண்ணப்ப படிவம்
21 4 2025 முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7,8,9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு ஏற்றம் செய்வதற்கான கடைசி நாள் 5 5 2025 அன்று மாலை 5 மணி ஆகும். தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் தகவல்களுக்கு 04633-212580/ 9688642211/ 7676591051 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விபரத்தினை பெற்றுக்கொள்ளலாம். விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகின்ற 7/5/2025 அன்று காலை 7 மணி அளவில் ஆண்களுக்கும்,
8 5 2025 அன்று காலை 7 மணி அளவில் பெண்களுக்கும், கீழ்காணும் விவரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் தேர்வு போட்டியில் கலந்து கொள்ள வருகின்றவர்களுக்கு பயணப்படியோ தினப்படியோ வழங்கப்பட மாட்டாது மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி 7, 8, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கான தடகளம் ஆ- பெ கூடைப்பந்து ஆ- பெ கால் பந்து ஆ- பெ ஹாக்கி ஆ- பெ கபடி , ஆ - பெ கையுந்து பந்து ஆ- பெ கிரிக்கெட் ஆண்கள் மட்டும் ஆகிய
விளையாட்டு களுக்கான மாவட்ட அளவிலான நேரடி தேர்வு தென்காசி இ சி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்களுக்கு 7/5/2025 மற்றும் பெண்களுக்கு 8-5-2025 அன்றும் நடைபெற உள்ளது மேற்கண்ட விளையாட்டு தேர்வில் பங்கேற்க காலை 7 மணிக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட அளவிலான தேர்வில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தகுதி பெறுவர்.
செய்தியாளர்
AGM கணேசன்