தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும், ஓசூர் மாநகர வடக்கு பகுதி கழக செயலாளரும், ஓசூர் மாநகராட்சி அமைப்பு குழு தலைவருமான அசோகா ஆகியோர் தலைமையில், ஓசூர் தேசிய நெடுஞ்சாலை ஜூஜூவாடி பகுதியில், பொதுமக்களுக்கு வெயிலின் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் கலசபாக்கம் v பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், வெள்ளரிக்காய், திராட்சை, குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சி கல்வி குழு தலைவர் ஸ்ரீதரன், மாமன்ற உறுப்பினர் ரஜினிகாந்த், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் நாராயண ரெட்டி, நந்தகுமார், மாமன்ற உறுப்பினர் குபேரன் சங்கர், பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், பாசறை மாவட்ட செயலாளர் ராமு, எம்ஜிஆர் மன்ற மாவட்ட சந்திரன், மாவட்ட துணை செயலாளர் மதன், தண்ணீர் லாரி சங்க தலைவர் சீனிவாச ரெட்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அருண், முன்னாள் கவுன்சிலர் முரளி, தகவல் தொடர்பு பிரிவு நகர இணை செயலாளர் ராஜா, பகுதி அவ்வை தலைவர் ரமேஷ், கழக நிர்வாகி மாதேஷ், மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ