அதிமுக சார்பில் நடைப்பெற்ற இப்ஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மூன்று மத குருமார்கள் பங்கேற்பு.!
கிருஷ்ணகிரி

ஒசூரில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற இப்ஃதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மூன்று மத குருமார்கள் பங்கேற்பு.!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, காந்தி சிலை அருகே பள்ளிவாசலில் அதிமுக சார்பில் இப்ஃதார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடைபெற்றது.
இந்து மதத்தின் சாமியார், கிறிஸ்தவ போதகர், இஸ்லாமிய முத்தவல்லி ஆகியோர் பங்கேற்று நோன்பு கடைபிடிப்பது, அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினர்..
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு பேசினர்
அப்போது இஸ்லாமியர்கள், அதிமுகவினர் என ஏராளமானோர் நோன்பு திறப்பில் பங்கேற்றிருந்தனர்..
நோன்பு திறப்பு விழாவினை ஒசூர் மாநகர கிழக்கு பகுதி செயலாளர் ராஜீ, மாமன்ற உறுப்பினர் தில்ஷாத் முஜிபூர் ரகுமான் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். அதிமுக சார்பில் நோன்பு கஞ்சி, பழ வகைகளுடன் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது,.
முன்னதாக பேசிய மாவட்ட பொருப்பாளர் வி.பன்னீர்செல்வம்:
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நண்பனான ரகுமான் அவர்களுக்காக திரைப்படத்தில் மேரா நாம் அப்துல்ரகுமான் என பாடல் வைத்தவர்
புனித ஹஜ் செல்ல நிதி உதவி, நோன்பு கஞ்சிக்கு இலவசமாக அரிசி வழங்கும் திட்டங்களை நிறைவேற்றியவர் புரட்சி தலைவி அம்மா.
புரட்சி தலைவர்,புரட்சி தலைவி ஆகியோர் அவர்களின் வழியில் இஸ்லாமியர்களுக்கு அரணாக நிற்பவர் புரட்சி தமிழன் எடப்பாடி கே பழனிசாமி என குறிப்பிட்டார்
நிகழ்ச்சியில் ஓசூர் ஒன்றிய செயலாளர் ஹரிஷ் ரெட்டி , பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெய் பிரகாஷ், பாசறை மாவட்ட செயலாளர் ராமு, ஓசூர் மாமன்ற உறுப்பினர் நாராயணன்,ஓசூர் மாமன்ற உறுப்பினர் லட்சுமி ஹேமகுமார், எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், இலக்கணினி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், மாவட்ட பிரதிநிதி அச்சு என்கிற லட்சுமணன், வட்ட செயலாளர்கள் சிவக்குமார், சீனிவாசன்,சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகி சாச்சுபாய், அராப்ஜான், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் செல்வம்,முன்னாள் கவுன்சிலர் பக்ஷு, நவீன்,சதாம், கேசவன், மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள், கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்,.
செய்தியாளர்
மாருதி மனோ