சிம்பொனி நிகழ்ச்சியை அறிமுகம் செய்ய லண்டன் சென்ற இளையயராஜா பேட்டி."

சினிமா

இசைஞானி இளையராஜா வேலியன்ட் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நிகழ்ச்சியை, வரும் 8 ஆம் தேதி, லண்டன் மாநகரில் அப்பல்லோ அரங்கில், அரங்கேற்றம் செய்கிறார். அதற்காக இளையராஜா, துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு செல்லகிறாரஅவர்

பயணம் மேற்கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்


புதிய சிம்பொனியை வெளியிடுவதற்காக உலகிலேயே தலைசிறந்த இசைக்குழு வான ராயல் லண்டன் குழு இருக்கிறது அவர்கள் வாசித்து ரசிகர்கள் கேட்டு இசையை வெளியிட இருக்கிறோம். 


இந்த நிகழ்ச்சி லண்டனில் அப்பல்லோ அரங்கில் நடைபெற உள்ளது வந்திருக்கக்கூடிய ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை 

உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறது உங்களுக்கு அப்படி இருக்கும் பொழுது எனக்கு எப்படி இருக்கும்

தமிழனாக எப்படி உணர்கிறீர்கள் எனக் கேட்ட பொழுது ஒரு மனிதனாக உணர்கிறேன் 


எல்லோரும் வாழ்த்தி இசை நிகழ்ச்சி நன்றாக நடப்பதற்கு இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் 


இன்க்ரிடபிள் இந்தியா போன்று இன்கிரிடபிள் இளையராஜா 


அனாவசியமான கேள்விகளை என்னுடன் கேட்கக் கூடாது. என்னுடைய வேலையில் கவனமாக இருக்கிறேன் நீங்கள் உங்கள் வேலையில் கவனமாக இருக்கிறீர்களா என்பது உங்களுக்கு தான் தெரியும்.

 எல்லோரும் சேர்ந்து தான் நான் நம்மளுடைய பெருமையை தான் அங்கே போய் நான் பறை சாற்றுகிறேன் இறைவனுடைய அருள் எல்லோருக்கும் பரிபூரணமாக கிடைக்கட்டும்...

எனக்கூறி சென்னை விமான நிலையத்திற்குள் புறப்பட்டுச் சென்றார்.

செய்தியாளர்

யாசர் அரபாத்