திருத்தணி கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் தனது புதிய பட கதையை முருகன் காலடியில் வைத்து வழிபட்டார்.!
சினிமா
திருத்தணி கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் தனது புதிய பட கதையை முருகன் காலடியில் வைத்து வழிபட்டார்.!
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது விழாவில் 3மா நாளான மாசி கிருத்திகை இணைந்து வந்ததால் ஏராளமான பக்தர்கள் மலைக்கோயில் குவந்து இரண்டு வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணி அளவில் நடிகர் ரஜினிகாந்த் மகள் திரைப்பட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார் அவருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தனது புதிய பட கதையை முருகப் பருமான் காலடியில் வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பக்தியுடன் வழிபட்டார் தொடர்ந்து திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்
யாசர் அரபாத்