ரூ.8 கோடி மதிப்பில் சென்னை கோபாலபுரத்தில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்த முதலமைச்சர். !
சென்னை

தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சுமார் ரூ.8 கோடி மதிப்பில் சென்னை கோபாலபுரத்தில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி’-ஐ இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
இப்புதிய அகாடமியில் நடைபெற்ற முதல் குத்துச்சண்டை பயிற்சிப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கிட்டத்தட்ட 750 பேர் அமரக்கூடிய வகையில், நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாடமி’, தமிழ்நாடு விளையாட்டுத் துறை முன்னெடுத்து வரும் பணிகளில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது எனவும்
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான குத்துச்சண்டை போட்டிகளை மேலும் ஊக்குவித்திடும் வகையில் இந்த அகாடமி செயல்படவுள்ளதில் மகிழ்ச்சியும் - பெருமிதமும் கொள்கிறோம் எனவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் அரசு அலுவர்கள் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )