சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தில் புதியதாக சேர்தவர்களுக்கு அடையாள அட்டை .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தில் புதியதாக சேர்தவர்களுக்கு அடையாள அட்டைகளை மாநில தலைவர் உத்தரவின்படி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தில் புதியதாக சேர்ந்த தர்மபுரி, சேலம், ஈரோடு பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவின் போது கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை சமுக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கே. நவாப் உத்தரவின்படி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் வழங்கி பேசும்போது .....
தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய பாகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மாநில தலைவர் எஸ்.கே.நவாப் அவர்களில் உத்தரவின்படி உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்படுள்ளது. இந்த அட்டையின் மூலமாக தங்கள் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது தொழில் அதிபர் முகமது அலி, ஊர்கவுண்டர் கிருஷ்ணமூர்த்தி, நுகர்வோர் சங்கத்தின் பொறுப்பாளர் ஜெய்சன், நுகர்வோர் சங்கத்தின்
நகர செயலாளர் ரஜினி ஆனந்த உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ