நீதிமன்றத்தில்  அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் போரூர் டோல் கேட்டில் இருந்து இயக்கப்படும்.!

Omni Bus, Koyambedu

நீதிமன்றத்தில்  அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் போரூர் டோல் கேட்டில் இருந்து இயக்கப்படும்.!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூரில் 42.70 கோடியில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடத்தை தமிழக முதல்வர் 07.12.2024 அன்று திறந்து வைத்தார். 

இந்தப் பேருந்து  நிறுத்துமிடத்தில் அதிகபட்சமாக 150 பேருந்துகள் வரை நிறுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்களின் பணிமனைகளிலும் மற்றும் போரூர் டோல் கேட் அருகிலும் இருந்தும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கு இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதன் படி  பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது சென்னை உயர் நீதிமன்றத்தில்  அடுத்த உத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு மற்றும் போரூர் டோல் கேட்டில் இருந்து தமிழகத்தின் தென்பதிகளுக்கு இயக்கப்படும் 

மேலும் தமிழக அரசால் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் அந்த பகுதியை சேர்ந்த மற்றும் ஈ சி ஆர் பகுதியை சேர்ந்த பயணிகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் பயன்படுத்தி 20 சதவீதத்திற்கு மேல் பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஏற்றி செல்கிறோம்.

இந்த பேருந்து நிலையம் அந்த பகுதி பயணிகளுக்கு மிக்க பயனுள்ளதாக உள்ளது. மேலும் இந்த பேருந்து நிலையத்துடன் எலக்ட்ரிக் இரயில் மற்றும் மெட்ரோ இரயில் கனெக்டிவிட்டி செய்து முடிக்கும் போது பயணிகளுக்கு அதிக பயன்களை தரும்.

மற்றும் ஈ சி ஆர் சாலை வழியாக பாண்டிச்சேரி, பூந்தமல்லி சாலை வழியாக கிருஷ்ணகிரி பெங்களூர் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. 

தமிழகத் தென்பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு அருகில் உள்ள டிராவல்ஸ் நிறுவனங்கள் மற்றும் போரூர் டோல் ஆகிய இடங்களில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும் என்பதை தெரிவித்துக் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi (MR)