ஜெனிவா சார்பில் 2025 ஆம் ஆண்டின் உயர்கல்வி மற்றும் சமூக சேவைக்கான மதிப்புநிறை டாக்டர் பட்டம்.!

கிருஷ்ணகிரி

ஜெனிவா சார்பில் 2025 ஆம் ஆண்டின் உயர்கல்வி மற்றும் சமூக சேவைக்கான மதிப்புநிறை டாக்டர் பட்டம்.!

பாரத் மெய்நிகர் பல்கலைகழகம் சமாதானம் மற்றும் கல்வி− ஜெனிவா சார்பில் 2025 ஆம் ஆண்டின் உயர்கல்வி மற்றும் சமூக சேவைக்கான மதிப்புநிறை டாக்டர் பட்டம்.
 
பெங்களூரில் ஏ.ஜே.இன்டர்நேஷனல் ஓட்டலில் நடந்த  பட்டமளிப்பு விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணம் ஒன்றியம், அரசு உயர்நிலைபள்ளி, நாட்டாண்மைக்கொட்டாய் பள்ளியில் பணிபுரியும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர், கிருஷ்ணகிரி கம்பன் கழகம் மகளிர் அணி தலைவர் சாந்தியின் முப்பது வருட கல்வி பணியையும் சமூக சேவையையும் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்  உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், இந்திய அரசின் உள்துறை அமைச்சக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் பல்கலைக்கழக சட்ட ஆலோசகர், டாக்டர்.எஸ்.ராகசந்தே டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக துறை தலைவர் டாக்டர்.டி.எம்.சாமி மற்றும் பல்கலைக்கழக நிறுவன தலைவர் டாக்டர் எம். தங்கவேல் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மாருதி மனோ