பராசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ 100% தேர்ச்சி பள்ளி செயலாளர் மாணவ மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினார்.!
தென்காசி

பராசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ 100% தேர்ச்சி
பள்ளி செயலாளர் மாணவ மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கினார்
தென்காசி, மே.15
தென்காசி மாவட்டம் குற்றாலம்
ஸ்ரீ பராசக்தி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.பள்ளி அளவில் 484 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற மாணவன் இசக்கி கிஷோர், 434 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்த மாணவி கலைவாணி, 430 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்த மாணவி சுனிதா ஸ்ரீ ஆகியோருக்கு இந்து சமய அறநிலைய துறை திருக்குற்றால நாதசுவாமி திருக் கோவில் உதவி ஆணையரும், பள்ளியின் செயலாளருமான ஆறுமுகம் வாழ்த்தி பாராட்டி பரிசளித்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 400
மதிப்பெண்களுக்கு மேற்பட்ட 8 மாணவர்
களை வெகுவாக பாராட்டினார். பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டையும், தெரிவித்தார்.
இச்சாதனைக்காக பள்ளி முதல்வர் செல்வி எஸ்.என்.சங்கரி மற்றும் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டினார். வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோரும், ஆசிரியர்களும், பொதுமக்களும் பாராட்டினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்