வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்க வேண்டும்.!

கிருஷ்ணகிரி

வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்க வேண்டும்.!

வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் உழைக்க வேண்டும் - கலசப்பாக்கம் வி.பன்னீர்செல்வம் பேச்சு.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி, சூளகிரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அத்திமுகம், அங்கொண்டப்பள்ளி, செட்டிப்பள்ளி வெங்கடேசபுரம் ஆகிய மூன்று ஊராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடி பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமன கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய செயலாளர் பாபு என்கிற வெங்கடாசலம் அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் கலசபாக்கம் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் புதிய நிர்வாகிகளை நியமித்து ஆலோசனைகளை வழங்கினர்.

அப்போது பேசிய வி.பன்னீர்செல்வம்:

தென்பெண்ணை ஆற்றின் கொடியாளம் சிற்றணையிலிருந்து பம்பிங் திட்டத்தின் மூலம் ஒசூர் தொகுதி வழியாக வேப்பனஹள்ளி தொகுதியில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்ப அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டத்தை திமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை.

வேப்பனஹள்ளி தொகுதியில் நமது இயக்கத்தின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அவர்கள் தற்போது வேப்பனஹள்ளி தொகுதியில் மக்கள் நன்மதிப்பை பெற்று பல்வேறு பணிகளை செய்துள்ளார்.. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமோக வேட்பாளர் வெற்றி பெற வைத்தோமானால், ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் முதலில் நிறைவேற்றப்படும்.. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும், வேலைவாய்ப்புக்கள் பெருகும்.

எனவே அதிமுகவின் ஒவ்வொரு தொண்டரும் வேப்பனஹள்ளி தொகுதியில் அதிமுக உறுப்பினர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார்..
 
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மல்லையன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், ஒன்றிய பொருளாளர் நாராயணப்பா,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், மற்றும் முன்னாள் ஊராட்சி பிரதிநிதிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ