14 வயதில் சதமடித்து கிரிக்கெட்டில் சாதனை படைத்த வீரருக்கு பீகார் முதலமைச்சர். !

விளையாட்டு

14 வயதில் சதமடித்து கிரிக்கெட்டில் சாதனை படைத்த வீரருக்கு பீகார் முதலமைச்சர். !

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் அதற்கு மாற்று ஏற்பாடாக 14 வயதான வைபவ் சூரியவன்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் இதுவரை ஐபில் விளையாட்டில் மூன்று முறை இடம் பெற்று விளையாடினார்.

குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரையும் வியக்க வைத்திருந்தார்.

வைபவ் சூர்யவன்ஷிக்கு பரிசுத்தொகையை அறிவித்த பீஹார் முதல்வர் :

இந்நிலையில் நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தனது மூன்றாவது ஆட்டத்தில் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி குஜராத் அணி நிர்ணயித்த 210 ரன்கள் என்கிற இலக்கினை எட்டி பிடிக்க மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். இந்த போட்டியின் போது ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக துவக்கி வீரராக களமிறங்கிய அவர் : 38 பந்தங்களை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் 11 சிக்ஸர்கள் என 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிகக் குறைந்த வயதில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றதோடு மட்டுமின்றி 35 பந்துகளில் சதம் விளாசி ஐபிஎல் கிரிக்கெட்டில் கிரிஸ் கெயிலுக்கு அடுத்து அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையும் நிகழ்த்தினார்.

அதுமட்டுமின்றி பல்வேறு வரலாற்று சாதனைகளை நிகழ்த்திய அவர் வருங்கால இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராகவும் உருவெடுப்பார் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அவரது இந்த சிறப்பான ஆட்டத்தை பாராட்டி பரிசுத்தொகையை அளித்துள்ள பீகார் முதல் மந்திரி அவருக்கு 10 லட்சம் ரூபாய் ரொக்க பரிசினை அறிவித்துள்ளார்.

இது குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்த பீகாரை சேர்ந்த சூரியவன்ஷிக்கு வாழ்த்துக்கள். தனது திறமை மற்றும் கடின உழைப்பால் அவர் இந்திய கிரிக்கெட்டிற்கும் புதிய நம்பிக்கையாக உருவாகியுள்ளார். அவரை நினைத்து நாங்கள் பெருமை அடைகிறோம்.

சூரியவன்ஷியின் குடும்பத்தை கடந்த 2024-ல் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அவர் ஐபிஎல் தொடரிலும் சாதனையை நிகழ்த்தியுள்ளது எங்களுக்கு பெருமையாக உள்ளது என அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.