அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்:.!

கிருஷ்ணகிரி

அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்:.!

தமிழ்நாடு முழுவதும் அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டம்: சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பாக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சூளகிரி வட்ட தலைவர் ஸ்டாலின் தலைமையில் நியாயவிலைக்கடை ஊழியர்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுக்குறித்து வட்ட தலைவர் ஸ்டாலின் கூறுகையில்:

விரல் ரேகை பதிவு, ஆதார் சரி பார்ப்பு ஆகியவை 40% என்பதை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் சரியான அளவில் பொட்டலமாக வழங்கிட வேண்டும். TNCSC எடை தராசு அலுவலக கணினியோடு இணைத்து ரசீது வழங்கிய பின்பு தான் நியாய விலை தராசுடன் இணைக்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். முதல்நாளான இன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பாகவும், நாளை கோட்டாட்சியர் அலுவலகம், நாளை மறுநாள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறினார். 
 
இந்த ஆர்ப்பாட்டம் மாநில துணை தலைவர் பழனிசாமி மற்றும் மாவட்ட இணை செயலாளர், கணேஷ், சூளகிரி வட்டத் தலைவர் இ.ஸ்டாலின்,  மற்றும்  வட்ட செயலாளர்,  நாகராஜ் வட்ட துணை தலைவர்.கணேசன், வட்ட துணை செயலாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் தலைமையில் 30 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில்  சூளகிரி   வட்ட அனைத்து‌ நியாய விலைக்கடை  பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ