உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை திமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.!
கிருஷ்ணகிரி

குருவிநாயனப்பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை திமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வரட்டனபள்ளி, குருவிநாயனப்பள்ளி ஆகிய இரு ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
பர்கூர் ஒன்றிய திமுக செயலாளர் இராஜேந்திரன் கலந்துக் கொண்டு உங்கடன் ஸ்டாலின் திட்டமுகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து குருவி நாயனப்பள்ளி, வரட்டனப்பள்ளி ஆகிய இரு ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடைப்பெற்ற இந்த முகாமில் அனைத்து அரசு துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
மேலும் இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் நூறு நாள் வேலை,கலைஞரின் மகளீர் உரிமை தொகை, வீட்டுமனைப் பட்டா, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கல்வி கடன், ரேசன் அட்டை , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காண வேண்டி துறைவாரியாக மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினார்கள். மேலும் இந்த சிறப்பு முகாமில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது.
மக்கள் பயன் பெறும் வகையில் நடைப்பெற்ற இந்த முகாமில் ஒன்றிய செயலாளர் அறிஞர் காளி கோவில் தளபதி கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், ஊராட்சி செயலாளர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ