இந்திய ராணுவத்திற்கு தங்கள் சிறிது சிறிதாக உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தினை நன்கொடையாக வழங்கிய சிறுவர்களின் செயலை பாராட்டி மாவட்ட ஆட்சியர் இனிப்பு வழங்கினார்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் தீவிரவாதிகளுக்கு எதிராக பாக்கிஸ்தானில் தாக்குதல் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு தங்கள் சிறிது சிறிதாக உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தினை நன்கொடையாக வழங்கிய சிறுவர்களின் செயலை பாராட்டி மாவட்ட ஆட்சியர் இனிப்பு வழங்கினார்.
கிருஷ்ணகிரி அருகே பள்ளேரிப்பள்ளியில் வசித்து வருபவர் லக்ஷ்மிபதி பிரஷாந்தி தம்பதி. இவர்களுக்கு தேஜஸ்பதி மற்றும் ஆதித்யாபதி என இரு மகன்கள் உள்ளனர். தினமும் தங்கள் பிள்ளைகளுக்கு திண்பண்டங்களுக்காக வழங்கும் சில்லறை காசுகளை இரு பிள்ளைகளும் உண்டியல் மூலம் சிறுக சிறுக சேர்த்து வைத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் பஹல்காம் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா பழி தீர்க்கும் விதமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் எனவே தாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை நமது இந்திய ராணுவத்திற்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்த சிறுவர்கள் தன் தாயுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உண்டியலுடன் வந்தனர்.
பின்னர் இரு சிறுவர்களும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களை சந்தித்து இந்திய ராணுவத்திற்கு தாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்த உண்டியலுடன் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்கள், பின்னர் சிறுவர்களிடம் இருந்து உண்டியலை பெற்றுக் கொண்ட ஆட்சியர் அவர்கள் இந்த சின்ன வயதில் நாட்டிற்காக உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த சிறுவர்களின் செயலைப் பாராட்டி இனிப்புகள் வழங்கினார்.
தாங்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்த உண்டியல் சேமிப்பை இந்திய ராணுவத்திற்கு நிதி வழங்க வழங்க உண்டியலுடன் வந்த சிறுவர்களின் செயல் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்
மாருதி மனோ