தென்காசி சாந்தி மருத்துவமனை சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு பேரணி .!
தென்காசி

தென்காசி சாந்தி மருத்துவமனை சார்பில் உலக இருதய தின விழிப்புணர்வு பேரணி
தென்காசி செப் 29
தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் மருத்துவ சேவையில் தன்னிகரில்லாத மருத்துவமனையாக செயல்பட்டுவரும் சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தினம் கொண்டாடப்பட்டது. சாந்தி பன்னோக்கு மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவரான டேவிட் செல்லத்துரை பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன், அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், இதயவியல் நிபுணர் மருத்துவர்கள் சங்கர தியாகராஜன், தமிழரசன், அன்பரசன், தினேஷ் கிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பேரணியின் தொடக்கத்தில் பேசிய மருத்துவர் அன்பரசன், இன்றிலிருந்து ஒவ்வொரு தனிநபரும் நடை பயிற்சியை மேற் கொள்ளவேண்டும் என்றும், நடைபயிற்சியின் பயனாக இதயத்தில் சீரான இரத்த ஓட்டம் நடைபெறும் என்றும், இதயம் சிறப்பானதாக செயல்பட்டால் மனித வாழ்வும் நோயில்லா வாழ்க்கையும் பெற்று மனித வாழ்க்கையில் பெறும் மகிழ்ச்சி அடையலாம் என்று தெரிவித்தார்.
நடை பயிற்சியின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பேரணி நடை பெறுவதாக தெரிவித்தார். தென்காசி பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் சாந்தி பல்நோக்கு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், மற்றும் குற்றாலம் பராசகத்தி கல்லூரி மாணவ, மாணவிகள், கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணி தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி, பெரிய கோவில், தென்காசி நகராட்சி, சந்தை பஜார், டிப்போ வழியாக சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் நிறைவடைந்தது.
ஊர்வலத்தில் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் மாணவர்கள் சென்றனர். தென்காசியில் முதன்முறையாக கரோனரி ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி, பேஸ்மேக்கர், பெரிபெரல் ஆஞ்சியோகிராபி, பெரிபெரல் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சைகள் மிகச் சிறந்த இதய நோய் மருத்துவர்களால் சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது.
செய்தியாளர்
AGM கணேசன்