மே 20 ல்அமைப்பு சாரா தொழிலாளர்கள், கைவினைஞர்களுக்கு விண்ணப்பபதிவு முகாம்.!

தென்காசி

மே 20 ல்அமைப்பு சாரா தொழிலாளர்கள், கைவினைஞர்களுக்கு விண்ணப்பபதிவு முகாம்.!

ஆலங்குளத்தில் மே 20 ல்அமைப்பு சாரா தொழிலாளர்கள், கைவினைஞர்களுக்கு விண்ணப்பபதிவு முகாம்

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் தகவல்

தென்காசி மே 13

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் வகை மக்களுக்காக, வருகிற மே 20 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணி முதல், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் சிறப்பு விண்ணப்ப பதிவு முகாம் நடை பெற உள்ளதாக ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருநெல்வேலி தொழிலாளர் நலத்துறை, தென்காசி மாவட்ட தொழில் மையம் மற்றும் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் இணைப்பாக நடத்தப்படுகிறது.

முகாமில் பங்கேற்கவர்கள் விவசாயம், கட்டுமானத் தொழில்கள், வாடகை வாகன ஓட்டுநர்கள், பனைமரத் தொழிலாளர்கள், காலணித் தொழிலாளர்கள், திருநங்கைகள், 
முடி திருத்தும் தொழிலாளர்கள், தையல் மற்றும் மண்பாண்டத் தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்கள் இடம் பெறலாம்.

இவர்கள் முற்றிலும் இலவசமாக நலவாரிய உறுப்பினர் அட்டையை பெறலாம். இத்துடன், உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத் திட்டங்கள் வழங்கப்படும்: ஓய்வூதியம், மகப்பேறு உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு காப்பீட்டு திட்டம் பணிக்கால மரண நிவாரணம், மேலும், “கலைஞர் கைவினைத் திட்டம்” மூலம், சுமார் 25 வகையான கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கு, ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி பெறும் வாய்ப்பு உள்ளது. இதில்: மூங்கில்/பிரம்பு வேலைப் பாடுகள் பனை ஓலை கூடை தயாரித்தல், மர வேலைகள், பாய்பின்னுதல், கயிறு தயாரித்தல், பொம்மை, சுடுமண் பொருட்கள் தையல், துணி நெய்தல், தேய்த்தல், வெளுத்தல் போன்றவை அடங்கும். முகாமில் பங்கேற்க வருகிற தொழிலாளர்கள்/தொழில் முனைவோர், கீழ்கண்ட ஆவணங்களை கொண்டு வரவேண்டும்:

ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பான்கார்டு, பள்ளி மாற்றுச் சான்றிதழ் வங்கிக் கணக்கு புத்தகம், சாதிச்சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் (2), விரிவான திட்ட அறிக்கை, விலைப் பட்டியல் மக்கள் அனைவரும் இம் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு,அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

செய்தியாளர்

AGM கணேசன்