சங்கரன் கோவிலில் புதிய மின்மாற்றி மக்கள் பயன் பாட்டிற்கு வந்தது.!
தென்காசி

சங்கரன் கோவிலில் புதிய மின்மாற்றி மக்கள் பயன் பாட்டிற்கு வந்தது
தென்காசி மே 05
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் பகுதியில் 24.04.2025 மாலை சுமார் 5.20 மணியளவில் திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது, காற்றின் வேகத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்தன , நகர்பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்தன, புளியம்பட்டி கிராமத்தில் மின்மாற்றி கட்டமைப்பு முழுவதும் சேதமடைந்தது,
சங்கரன்கோவில் கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின்பேரில் உதவி செயற் பொறியாளர் நகர் புபேஸ்ராஜ்மோகன், கிராமபுறம் தங்கராஜ், நகர்பகுதி உதவி பொறியாளர் கருப்பசாமி, நகர்- 2 பிரிவு இளநிலை பொறியாளர் கணேஷ் இராமகிருஷ்ணன் தலைமையில் மின்வாரிய களப்பணியாளர்கள் சேதமடைந்த மின்மாற்றி கட்டமைப்பை புதிதாக நிறுவும் பணியினை மின்வாரிய களப்பணியாளர்களுடன் இணைந்து K2 ஒப்பந்த பணியாளர்கள் சரிசெய்தவுடன் சேதமடைந்த மின்கம்பங்களுக்கு பதில் புதிய மின்கம்பங்களை நிறுவி, பாதிப்படைந்த மின்வயர்களை சரிசெய்தும் உடைந்த இன்சுலேட்டர்களை மாற்றம் செய்து புதிய இன்சுலேட்டர்கள் பொருத்தி பணிகளை நிறைவு செய்து சங்கரன் கோவில் கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியன் மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்து சீரான மின்சாரம் வழங்கினர்.
செய்தியாளர்
AGM கணேசன்