ஏ டி ஜி பி ஜெயராம் கைது.! சென்னை உயர்நீதி மன்றம் கிடுக்குப் பிடி. !
சென்னை

சென்னை ஹைகோர்ட், சிறுவன் கடத்தல் வழக்கில், தமிழக கூடுதல் காவல் இயக்குநர் (ADGP) ஜெயராமை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது. கடத்தலுக்கு அவரது வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும், வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜெயராமின் தொடர்பை ஒப்புக்கொண்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. நீதிபதி நேரடியாக ஜெயராமை நீதிமன்றத்தில் வரவழைத்து, போலீசாரால் கைது செய்ய உத்தரவிட்டார். இது தமிழக காவல் வரலாற்றில், பணியில் இருக்கும் மிக உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் சம்பவமாகும்.ஐபிஎஸ் அதிகாரிகளை கைது செய்த சம்பவங்களின் உதாரணங்கள் இருந்தபோதிலும், ஏடிஜிபி அளவிலுள்ள ஒரு அதிகாரி கைதானது இது முதல்முறையாக பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக இதை எதிர்க்கட்சிகள் எடுக்கத் தொடங்கியுள்ளன.
வழக்கின் பின்னணி
தனுஷ் என்ற இளைஞர், தனது காதலியின் பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து, இருவரும் தலைமறைவாக இருந்தனர். இதைத் தொடர்ந்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் சிலர், தனுஷின் வீட்டில் வந்து, அவரது தம்பியை கடத்திச் சென்றனர். பெண்ணின் தந்தை, குடும்பத்தினர், முன்னாள் பெண் போலீசார், வழக்கறிஞர் மற்றும் சிலர் இந்த கடத்தலில் நேரடி பங்கு வகித்தனர். போலீசார் போல நடித்து, சிறுவனை கடத்திச் சென்றிருந்தனர்.
போலீசார் விசாரணையில், இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் அதிகாரப்பூர்வ வாகனம் பயன்படுத்தப்பட்டது என்றும், அந்த அதிகாரி ஜெயராமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.இதன் அடிப்படையில், ஜெயராமும், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ ஜகன்மூர்த்தியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விசாரணையின்போது, ஜெயராமை கைதுசெய்ய ஹைகோர்ட் இன்று உத்தரவிட்டது.
இவர் 1996ம் ஆண்டு பேட்ச் கர்நாடக ஐபிஎஸ் அதிகாரியாகும்.