மேட்டுப்பாளையம் நகராட்சி நகர மன்ற கூட்டத்தொடரில் வழிபாட்டு தளங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.!
மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் மெஹ்ரிபா பர்வீன் அஷ்ரப்அலி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகர மன்ற துணை தலைவர் அருள்வடிவு முனுசாமி,
நகராட்சி ஆணையாளர் அமுதா, ME, JE , AE மற்றும் நகராட்சி நிர்வாகம் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் நகராட்சி 33 வார்டுகளிலும் முறையாக குப்பைகளை அகற்றாத நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேட்டுப்பாளையம் தாலுக்கா சி ஐ டி யூ பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்
மமக 6 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அ.ஸமீனாபேகம் அப்துல் ஹக்கீம் மற்றும் காங்கிரஸ் 28 வார்டு நகர மன்ற உறுப்பினர் அனிதா குணசேகரன், காங்கிரஸ் 23 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கவிதா புருஷோத்தமன் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 8 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் புவனேஸ்வரி , திமுக 20 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் காளியம்மாள் மல்லி ஆகியோர் வழிபாட்டு தளத்தின் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெற மனு அளித்தனர்.
6 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஸமீனா அப்துல் ஹக்கீம் கோரிக்கையை ஏற்று NCMS எதிரில் உள்ள பாரதியார் நூற்றாண்டு கட்டிடம் பழுதடைந்து இருப்பதை அகற்றிவிட்டு புதியதாக வணிக வளாகம் , மண்டபம் ,கலையரங்கம் , மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பு
31-08-2023 அன்று நகர மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் வழிபாட்டு தளத்தின் மீது உள்ள வழக்கை சிறப்பு தனி தீர்மானம் வைத்து வாபஸ் பெற ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ( தற்பொழுது வரை வாபஸ் பெறப்படவில்லை 28-12-2024 இன்று மீண்டும் மனு அளித்தனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )