அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா .!

தென்காசி

அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா .!

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா 

தென்காசி மே 15.

தென்காசி  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம்   கொண்டாடப் பட்டது.

மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு)  உறைவிட மருத்துவர் செல்வபாலா தலைமையில், தலைமை மருத்துவர்  ஜெஸ்லின் முன்னிலையில் VTSR குழும நிறுவனர் இம்ரான் கான்  சிறப்பு விருந்தினராக கலந்துவிழாவினை சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியினை  செவிலியர் மல்லிகா தொகுத்து வழங்கினார்கள்,
செவிலியர் உமா மஹேஸ்வரி  வரவேற்புரை ஆற்றினார்,.
செவிலியர் கண்காணிப்பாளர் ஜெகதா  வாழ்த்து மடல் வாசித்தார்,
செவிலியர் கண்காணிப்பாளர்கள்பத்மாவதி,ராசாத்திஜெகதா,வசந்தி மற்றும் முத்து லெட்சுமி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்
பட்டனர்.

தலைமை மருத்துவர் ஜெஸ்லின் பேசும் போது மருத்துவ மனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியர்கள் என பாராட்டி, தியாக மனப்பான்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றும்  அனைத்து செவிலிய சகோதர,  சகோதரிகளுக்கும், செவிலியர் தின வாழ்த்துக்களை கூறி அனைவருக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
தலைமை மருத்துவர் ஜெஸ்லின் அனைத்து செவிலியர்களின் சார்பாக தலைமைச் செவிலியர் பத்மாவதி  தென்காசி மருத்துவமனையோடு இணைந்து செயலாற்றும் VTSR குழும நிறுவனர் இம்ரான் கானிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

 VTSR குழும நிறுவனர்  இம்ரான் கான்  அனைவரையும் வாழ்த்தி பரிசுகள்  வழங்கி சிறப்புரை யாற்றினார். 

தொடர்ந்து செவிலிய சகோதர சகோதரிகளின் ஆட்டம் பாட்டம் கலை நிகழ்ச்சிகள்  நடை பெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற அனைவருக்கும் மருத்துவர் ஜெஸ்லின் பரிசுகள் வழங்கி பாராட்டினார். 
முடிவில் செவிலியர் கண்காணிப்பாளர் ஜெகதா நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர்

AGM கணேசன்