ஸ்ரீ முத்துராய ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் நான்காம் ஆண்டு பல்லாக்கு உற்சவம், கோலாட்டம், தெலுங்கு நாடக நிகழ்ச்சி.!

கிருஷ்ணகிரி

ஸ்ரீ முத்துராய ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் நான்காம் ஆண்டு பல்லாக்கு உற்சவம், கோலாட்டம், தெலுங்கு நாடக நிகழ்ச்சி.!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த குண்டுகுறுக்கே கிராமத்தில்  உள்ள ஸ்ரீ முத்துராய ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் நான்காம் ஆண்டு பல்லாக்கு உற்சவம், கோலாட்டம், தெலுங்கு நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை நடைபெற்றது. பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் சூளகிரி, காமன் தொட்டி, அட்டகுருக்கை, சப்படி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்,.

செய்தியாளர்

மாருதி மனோ