கிருஷ்ணகிரியில்  திருக்குறள் திருப்பணித் திட்டம் .!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில்  திருக்குறள் திருப்பணித் திட்டம் .!

கிருஷ்ணகிரியில்  திருக்குறள் திருப்பணித் திட்டம் 

 தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி துறை, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கம்பன் கழகம் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தேன் தமிழ் நாட்டியாலயா பள்ளியில் தொடங்கப்பட்டது. அதில்  மு. ஸ்ரீரங்கன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

கம்பன் கழக தலைவர் மதிப்புறு முனைவர் இ.ரவிந்தர் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பை கண்காணித்தார். சிறப்பு விருந்தினராக சீனிவாசா கல்வி மையம் தலைவர் மதிப்புறு முனைவர்  ஜெ.பாலாஜி சிறப்புரை ஆற்றினார்

இப்பயிற்சி வழங்க பயிற்சியாளர் தகடூர் தமிழ் கதிர் மற்றும் குரு டாக்டர். மதுமொழி ஆனந்த் ஆகியோர் திருக்குறள் பயிற்சி அளித்தனர்.

திருக்குறள் பயிற்சி பெற வந்த மாணவ மாணவிகளுக்கு சிங்காரவேல் மற்றும் சீனிவாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

செய்தியாளர்

மாருதி மனோ