1கோடி மதிப்பீட்டில் வீடு வழங்கும் திட்டத்தில் 43 நபர்களுக்கு வீடுகள். !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, நாகோஜனஹள்ளி பேரூராட்சி வேலம்பட்டியில் ரூ.1கோடி மதிப்பீட்டில் வீடு வழங்கும் திட்டத்தில் 43 நபர்களுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான, பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே.மதியழகன்.,MLA கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி, பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள், அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் BLA2 நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ