அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விசுவநாதர் சுவாமி லிங்க பிரதிஷ்டை .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விசுவநாதர் சுவாமி லிங்க பிரதிஷ்டை வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக சட்டமன்ற அசோக்குமார் உள்ளிட்ட ஏராளமான சிவ பக்தர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதி 2 -ல் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தினை புதுபித்து புதியதாக அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விசுவநாதர் சுவாமி லிங்க பிரதிஷ்டை வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.
இதன் முன்னதாக இராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து சிவபக்தர்கள் சிவன் பம்பை உடுக்கைகளுடன் அம்மையப்பர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நந்திதேவர் மற்றும் காசி விஸ்வநாத லிங்க பிரஷ்டை வேத மந்திரங்கள் முழங்க சிவச்சாரியர்கள் மூலம் பிரதிஷ்டை நடைபெற்றது.
இதன் முன்னதாக கோவில் முன்பாக நடைபெற்ற வேள்வி பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட தீர்த்த குடங்கள் திருக்கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டு ஶ்ரீ காசி விஸ்வநாதார் லிங்கசுவாமிக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆகம விதிப்படி புனித நீர் தீர்ந்த அபிஷேகம் செய்யப்பட்து.
இதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தஅருள்மிகு விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விசுவநாதர் சுவாமி லிங்க சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும், கற்பூர ஆராதனைகளும் நடைபெற்றது,
இந்த லிங்க பிரதிஷ்டை விழாவில் கிருஷ்ணகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் உள்ளிட்ட ஏராளமான சிவ பக்தர்கள் கலந்துக் கொண்டு அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விசுவநாதர் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டிகாணப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி காயத்திரிதேவி கோவிந்தராஜ் மற்றும் பலர் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ