பொதுத்தேர்வு முடிவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளை பாராட்டும் விதமாக ஊக்கத் தொகை மற்றும் பதக்கங்களை வழங்கி கெளரவிப்பு .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பருவதராஜாகுல மீனவர் சமுதாய நல அறக்கட்டளை சார்பாக நடந்து முடிந்த அரசுப் பொதுத்தேர்வு முடிவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளை பாராட்டும் விதமாக ஊக்கத் தொகை மற்றும் பதக்கங்களை வழங்கி கெளரவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் பருவதராஜகுல மீனவர் சமுதாய நல அறக்கட்டளை மற்றும் மீன் வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் நடந்துமுடிந்த அரசுபொதுத்தேர்வு முடிவில் 10 வகுப்பு, மற்றும் மற்றும் 12 ம் வகுப்புகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பழையபேட்டை, ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் முன்பாக நடைபெற்ற இந்த விழாவிற்கு சங்கத்தின் நிறுவனத்தலைவர் தமிழ் ஆசிரியர்.செல்வம் அவர்கள் தலைமையில நடைபெற்ற இந்த விழாவினை மாவட்ட தலைவர் வெங்கடேசன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்,
மேலும் இந்த விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமர வடிவேல்,
மாவட்ட துணைச் செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் பவித்திரன், இணை செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தவிழாவின் போது நடந்து முடிந்த அரசு பொது தேர்வு முடிவில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் பவகுப்பு, வகுப்பு, மற்றும் 12-ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியதோடு அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஊக்கத்தொகையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் விழாவின் போது சமுதாயம் சார்ந்த தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஊக்கத்தொகை, சான்றிதழ், கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மருத்துவ துறையில் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் பருவதராஜ குல நிறுவனத்தின் தலைவர் P.செல்வம், முதுகலை தமிழாசிரியர் ஒய்வு அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
தன்னை சுற்றியுள்ள சமுதாயமும் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாணவ, மாணவிகளை ஊக்கு விக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழாவில் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்களான சொக்கலிங்கம், சத்தியமூர்த்தி, ஸ்ரீரங்கன் மற்றும் மீன் வியாபாரிகள் நலச் சங்கத்தினை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ