ஒசூர் அருகே அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்; முன்னாள் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. !
கிருஷ்ணகிரி

ஒசூர் அருகே அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்; முன்னாள் அமைச்சர் முன்னிலையில் திமுகவினர் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒசூர் தெற்கு ஒன்றியம் முத்தாலி கிராமத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது..
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி, அம்மா பேரவை மாநில துணை செயலாளர், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் வி.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர். ஒசூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஹரீஷ்ரெட்டி தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட பொறுப்பாளர் பன்னீர்செல்வம்:
ஒசூர் பகுதி என்பது ஒருக்காலத்தில் , அதிகாரிகளுக்கு தண்டனை பகுதியாக இருந்த நிலையில் இன்று ஒசூர் முக்கிய நகரமாக உருவெடுத்திருப்பதற்கு முதல் காரணம் அதிமுக அரசு தான்
முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் அமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு பகுதிக்கும் பார்த்து பார்த்து திட்டங்களை பெற்று தந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் சண்டையிட்டு அதிமுக ஆட்சி காலத்தில் திட்டங்களை வகுத்தார்..
அதிமுக ஆட்சி காலத்தில் வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டை வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதற்கு காரணமாக இருந்தார் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி என்றார்...
அதனை தொடர்ந்து திமுகவிலிருந்து விலகிய 100பேர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.. பாலகிருஷ்ணா ரெட்டி, பொறுப்பாளர் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.. நிகழ்ச்சியில் மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பொய்யாமொழி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், ஓசூர் பகுதி செயலாளர் ராஜு,ஓசூர் மாமன்ற உறுப்பினர் லட்சுமி ஹேமா குமார்,ஒன்றிய துணை செயலாளர் நவீன், மாவட்ட பிரதிநிதி ஜெயராமன்,அம்மா பேரவை ஒன்றே செயலாளர் ரவி, எல்லாமே கொத்தூர் கிளை செயலாளர் சத்யா,கழக நிர்வாகி ஸ்ரீநாத், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் என கலந்து கொண்டனர்,.
செய்தியாளர்
மாருதி மனோ