வேம்பு திரைப்படத்தினை காண நூற்றுக்கும் மேற்பட்ட சிலப்பாட்ட வீரர், வீராங்கனைகள் சிலம்பம் சுற்றி வந்தனர்.!
சினிமா

கிருஷ்ணகிரியில் திரையிடப்பட்டுள்ள வேம்பு திரைப்படத்தினை காண நூற்றுக்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் சிலம்பம் சுற்றியவாறு திரைப்படத்தினை காண வந்தனர். அவர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
தமிழர்களின் வீர கலையான சிலம்பம் கலையை மையமாக வைத்து,பெண்ணினத்தை போற்றும் விதமாக வேம்பு திரைப்படம் கிருஷ்ணகிரியில் உள்ள முருகன் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க சிலம்பம் கலையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நடுத்தரப்பட்ட மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்த நிலையில் வேம்பு திரைப்படத்தினை காண நூற்றுக்கும் மேற்பட்ட சிலப்பாட்ட வீரர், வீராங்கனைகள் கைகளில் சிலம்பத்தினை சுற்றியவாறு திரையரங்கம் வந்த இவர்களை வேம்பு படத்தின் தயாரிப்பாளார் கோல்டன் சுரேஷ் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
பின்னர் சிலம்பாட்ட கலைஞர்கள் மக்கள் மத்தியில் சிலம்பத்தினை சுற்றியவாறு வேம்பு திரைப்படத்தினை கண்டுகளித்தனர்.
மேலும் இது குறித்து வேம்பு திரைப்படத்தின் தயாரிப்பாளர் கோல்டன் சுரேஷ் கூறுகையில் பெண்களுக்கு இளைக்கப்படும் குற்றங்களை தடுக்கும் பெருட்டும், தர்காப்பு கலைகளை கற்பதினால் பெண்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட வன்கொடுமைகளில் இருந்து தங்களை எவ்வாறு தர்க்காத்து கொள்ள முடியும் என்ற சமுதாய நோக்கத்தோடு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் வெற்றிகிரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது,
லாப நோக்கில் இல்லாமல் சமுதாய நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த வேம்பு திரைப்படத்தினை பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளை கட்ட மின்றி இலவசமாக கண்டுகளிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ