மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்ஸோவில் கைது.!
குற்றம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருபவர் சிவகுமார் (54). இவர் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் காவல் துறை கட்டுப்பாட்டு புகார் அறை எண் 100 ற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஊதியூர் மற்றும் காங்கேயம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆசிரியர் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து சிவக்குமார் மீது போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.