அண்ணன் செத்தால் திண்ணை காலி
ஈரோடு

நேற்று உடல்நலக் குறைவால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார். ஏற்கனவே இதே ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் மகன் எம்.எல்.ஏ - வாக இருந்து மாரடைப்பால் இறந்து போனார்.
இதனால் இடைத்தேர்தல் நடைபெற்றது..அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்நிலையில் அவரும் நேற்று காலமானார்.
அவர் காலமாகி உடல் அடக்கம் நடைபெறுவதற்கு முன்னரே பல கட்சிகள் அந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என ஆலோசித்து வருகின்றன.
த.வெ.க. சார்பில் நடிகர் விஜய் நேற்று முதலே இத்தொகுதியில் இடைத்தேர்தலை எப்படி சந்திக்கலாம் என ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக பரவலான செய்தி தகவல்கள்.
இதற்கிடையில் திமுக -வும் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக செய்திகள்.
இது போக இன்னும் பல கட்சிகள் யாரை வேட்பாளராக களம் இறக்கலாம் என்ற யோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஒருவர் இறந்த சூடு கூட ஆறாத நிலையில் அப்பகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசனைகள் நடத்துவது, அரசியலில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
அண்ணன் செத்தால் திண்ணை காலி என பழமொழி உள்ளது. அதற்கேற்ப தற்போதைய அரசியல் சூழல் உள்ளது என்பதை விளக்குகிறது ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மரணம்.
மேட்டுப்பாளையம் Rafi ( MR )