திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இ.ஆ.ப. துவக்கி வைத்தார்.
செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி, வேலுநாச்சியார் வளாக குடியிருப்பு நியாயவிலைக் கடையில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது.!
தமிழர் திருநாளாம் தை பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 2025-ம் ஆண்டு தை பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் ஒரு முழுக் கரும்பு வழங்க தமிழ்நாடு அரசால் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் எவரேனும் ஒருவர் நியாய விலைக்கடைக்குச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம். நியாய விலைக்கடைகளில் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படவுள்ள தேதி, காலம், நேரம் குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களும் அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்தின்படி நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, துணைப்பதிவாளர்(பொதுவிநியோகத்திட்டம்) அன்புக்கரசன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
அழகர் சாமி