திண்டுக்கல் பகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு மர கன்றுகள் நடும் நிகழ்ச்சி.!

திண்டுக்கல்

திண்டுக்கல் பகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்தநாளை முன்னிட்டு மர கன்றுகள் நடும் நிகழ்ச்சி.!

திண்டுகல்லில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு செல்ல மரக்காயர் குடும்பத்தார் சார்பாக குளத்தை தூர்வாருதல் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.!                                          ‌    ‌  

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் சார்பாக பல நலத்திட்ட உதவிகள் செய்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் பேரூராட்சியில் வசிக்கும் வக்கீல் செல்ல மரக்காயர் நீண்ட காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல பொறுப்புகள் வகித்தவராகவும் அமைச்சரின் மனதில் நீங்கா இடம் பெற்றவராகவும் திகழ்கிறார்.

இதில் அவரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக வழக்கறிஞர் செல்ல மரக்காயர் குடும்பத்தின் சார்பாக ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டும், ஆத்தூர் மற்றும் சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வாரியும் அதன் ஓரப்பகுதியில்  நடவு செய்தும் வருகின்றார்.

மேலும் இவர் செய்த இந்த நற்செயலை கண்டு பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிகழ்வில் சித்தையன்கோட்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் போதும் பொண்ணு முரளி, துணைத் தலைவர் ஜாகிர் உசேன், செயல் அலுவலர் ஜெயமாலு, ரபிக் மைதீன், காங்கிரஸ் மூத்த நிர்வாகி ரசூல் மைதீன், பேருர்கழக இளைஞரணி அமைப்பாளர் முகமது ரபீக், அமானுல்லா, செயலாளர் ஹக்கீம் சேட், ஜெயராமன், சௌந்தர பாண்டியன் மற்றும் முன்னாள் வார்டு உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

செய்தியாளர்

அழகர் சாமி