திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகன மோதி விபத்து ஒருவர் பலி.!
திண்டுக்கல்

திண்டுக்கல்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகன மோதி விபத்து ஒருவர் பலி.!
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்To மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் மாலை 5 :40 மணியளவில் சரக்கு ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகன ஓட்டுநர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி திண்டுக்கல் தாலூகா காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொள்ளைகையில் பலியானவர் வேடசந்தூர் வட்டம் தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த ரஞ்சித் (24) தகப்பனார் பெயர் நாகராஜ் எனவும் தெரியவந்தது. மேலும் பிரேதத்தை கைப்பற்றி அவசர வாகன மூலம் திண்டுக்கல் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..
செய்தியாளர்
அழகர் சாமி