ஐ இ எல் சி கிருஸ்துவ நிதி உதவி பள்ளியில் முறைகேடு நடவடிக்கை எடுக்க நிர்வாக குழு மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

திருப்பத்தூர்

ஐ இ எல் சி கிருஸ்துவ நிதி உதவி பள்ளியில் முறைகேடு நடவடிக்கை எடுக்க நிர்வாக குழு மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

திருப்பத்தூர் அடுத்த ஆம்பூரில் இயங்கி வரும் ஐ இ எல் சி கிருஸ்துவ நிதி உதவி பள்ளியில் முறைகேடு நடவடிக்கை எடுக்க நிர்வாக குழு மாவட்ட ஆட்சியரிடம் மனு.!


நாகர்கோவிலை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐ இ எல் சி கிருஸ்துவ அமைப்பின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக ஆம்பூரில் செயல்பட்டு வருகிறது. 

இந்தப் பள்ளியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாக குழுவினர் இன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.

 அதில் தலைவர் மற்றும் செயலாளர் பதவி வைக்க கூடியவர்கள் தன்னிச்சையாக பள்ளிக்கு தாளாளர் மற்றும் ஆசிரியர்களை பணம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்வதாக புகார் தெரிவித்தனர் கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் தொடர்ந்து பல்வேறு ஏழை மாணவர்களுகாக பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. 

ஏற்கனவே இந்த பள்ளியின் நிர்வாக சீர்கேடு குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

ஐ இ எல் சி அமைப்பில் உள்ள நிர்வாக குழுவிடம் எந்த அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக ஒரு சிலர் செயல்படுவதாகவும், பணத்தைப் பெற்றுக் கொண்டு நியமனம் ஆசிரியர்களை மற்றும் இதர பணிகளுக்கு ஆட்களை சேர்ப்பதாகவும் இன்று புகார் தெரிவித்தனர்.

அதே போல் கிருஷ்ணகிரி,  வேலூர், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஏற்கெனவே ஆசிரியர் மற்றும் பணியாளர் நியமனம் குறித்து புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது என்றும் நிர்வாகக் குழுவினர் தெரிவித்தனர்.‌

செய்தியாளர்

ந.வெங்கடேசன்