விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி செய்த துபே.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

விளையாட்டு

விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி செய்த துபே.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

அதனால் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் திண்டாடும் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல எஞ்சிய 6 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் சிவம் துபே தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு நிதியுதவி செய்துள்ளார். அதாவது தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் வருடாந்திரம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு உதவித்தொகை செய்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடம் 10 வீரர்களை தேர்ந்தெடுத்துள்ள அந்த சங்கம் தலா 30000 ரூபாய் வீதம் நிதியுதவி அளிக்கிறது.

துபே உதவி:

அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்ய முடியுமா? என்று சிவம் துபேவிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போது தம்முடைய சார்பில் தலா 70000 ரூபாய் நிதியு.தவி வழங்குவதாக சிவம் துபே வாக்குறுதி கொடுத்துள்ளார். அதன்படி இன்று நடைபெற்ற விழாவில் சிவம் துபே தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தலா 70000 வீதம் 7 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

அந்த விழாவில் சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய துணைச் செயலாளர் டாக்டர் பாபா ஆகியோர் இருந்தனர். மேலும் முன்னாள் இந்திய வீரர் ராபின் சிங், எம்ஆர்எப் பேஸ் பவுண்டேஷன் தலைமைப் பயிற்சியாளர் செந்தில்நாதன், முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் முகமது ரியாஸ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ரசிகர்கள் பாராட்டு:

அவர்களது முன்னிலையில் துபே டேபிள் டென்னிஸ் வீரர் பி.பி அபிநந்த், வில்வித்தை வீராங்கனை கேஎஸ் வேனிசா ஸ்ரீ, பாரா தடகள வீராங்கனை முத்துமீனா வெள்ளசாமி, ஸ்குவாஸ் வீராங்கனை சமீனா ரியாஸ், கிரிக்கெட் வீரர் ஜெயந்த் ஆர்.கே., வீராங்கனை எஸ் நந்தனா ஆகியோருக்கு தலா 70000 ரூபாய் காசோலையை வழங்கினார். அத்துடன் சர்ஃபிங் வீராங்கனை கமலி, தடகள வீராங்கனை அபிநயா, தடகள வீரர் ஜித்தின் அர்ஜுனன், சதுரங்க வீரர் தக்சந்த் ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.

துபே பேசியது பின்வருமாறு. “சிஎஸ்கே அணி ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு சென்ற போது டாக்டர் பாபா அவர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்வது பற்றி சொன்னார். இது இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடியது. இந்த சிறிய உதவித்தொகை அவர்கள் நாட்டுக்காக பெரியளவு பாடுபடுவதற்கான உதவியைச் செய்யும்” என்று கூறினார். அதைப் பார்க்கும் தமிழக ரசிகர்கள் மும்பையை சேர்ந்த துபேவுக்கு என்னா மனசுய்யா? என்று பாராட்டுகின்றனர்.