ரயில் பெட்டிகளில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்.!
குற்றம்

ஈரோடு வழியாக சென்ற இருவேறு ரயில்களில் கடத்திச் செல்லப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா- திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பையில் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில் பொது பெட்டியில் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுப்பெட்டியில் கஞ்சாவை வைத்து கடத்தியது யார் எனவும் இது போன்று ஏற்கனவே இது போன்று கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் நடந்துள்ளனவா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.