பெரியாரிய சமூக நீதி கோட்பாட்டை கொண்டு செல்லும் வகையில் யாழ்ப்பாணத்தில் பெரியார் சிலை.!

உலகம்

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் தந்தை பெரியாருக்கு முதல் திருஉருவச் சிலை.!

தற்போது  தமிழக அரசியல் சூழலில் பெரியார் குறித்த விமர்சனங்களும் விவாதங்களும் உருவாகி இருக்கும் நிலையில், இலங்கை பயணத்தில் இருக்கும் நான் பெரியாரின் கருத்துக்கள் இந்த மண்ணிற்கும் அவசியமானது என்பதை உணர்கிறேன் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் இலங்கையில் உரையாற்றியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக யாழ்ப்பாணம் பகுதியில் இருக்கும் சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை செய்ததன் பேரில் யாழ்பாணத்தில் ஒரு பெரியார் சிலை நிறுவுவது என்று  முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது எனவும்

லெனின், காரல் மார்க்ஸ், பாரதியார், காந்தியடிகள் என்று பல்வேறு தலைவர்களுக்கும் இங்கே சிலைகள் நிறுவப்பட்டிருக்கிறது.  அதன் அடிப்படையில் பெரியாருக்கு அவரது சமூக நீதி கருத்துக்களை ஈழத்து மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் நிறுவப்படும் முதல் சிலையாக இது இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இயக்குநர் ராஜ்குமாரின் முழு வீடியோ உரையை நியூஸ் டுடே தமிழ் யூடியூப் பக்கத்தில் பார்த்துக் கொள்ளவும் வாசகர்களே.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )