கடையத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா .!

தென்காசி

கடையத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா .!

கடையத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா

தென்காசி ஜுன் 19 

தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரம் மகிளா காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் 55 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது .கடையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சிக்கு கடையம் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி பார்வதி நாதன் தலைமை வகித்தார்.கடையம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் ஆழ்வார்குறிச்சி பேரூர் கழக தலைவர் முருகன் மகிளா காங்கிரஸ் நிர்வாகி முருகேசி,இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி முப்புடாதி, தென்கால் நீர் பாசன கமிட்டி தலைவர் மாரியப்பன்,கருத்த பிள்ளையூர் ராஜா, பேச்சாளர் தங்கம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் தூய்மை காவலர்கள் வியாபாரிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

செய்தியாளர்

AGM கணேசன்