தென்காசியில் பி எம் டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!
தென்காசி

தென்காசியில்
பி எம் டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தென்காசி ஏப்ரல் 12
முன்னோர்கள் கட்டி எழுப்பிய தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் மற்றும் பண்பொழி திருமலை குமாரசுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழுவில் தேவர் சமுகத்தை புறக்கணித்த
அறநிலைய துறையின் செயலை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
பி எம் டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு
பி எம் டி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் கே. என்.இசக்கி ராஜா தேவர் தலைமை வகித்தார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னுராஜ் தேவர் மாநில அமைப்பு செயலாளர்கள் வள்ளிக்கண்ணு தேவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் மற்றும் பண்பொழி திருமலை குமார சுவாமி கோவில் அறங்காவலர் குழுவில் தேவர் சமூகத்தை புறக்கணித்த தமிழக அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு தலைவர் சேகர் பாண்டியன் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பசும்பொன் பாண்டியன் விருதுநகர் மாவட்ட பொதுச் செயலாளர் அப்பாத்துரை தென்காசி மாவட்ட பொதுச் செயலாளர் வைரம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்