மடிப்பாக்கத்தில் கழிவுநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் மணல் லாரி சிக்கியது.!

சென்னை

மடிப்பாக்கத்தில் கழிவுநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் மணல் லாரி சிக்கியது.

சென்னை மடிப்பாக்கம், பிள்ளையார் கோயில் தெருவில், மணல் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த லாரி திடீரென சாலையில் புதைந்து ஒரு பக்கமாக சாய்ந்தவாறு சிக்கிக் கொண்டது. 

சாலைக்கு நடுவே குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டி குழாய் பதிக்கும் பணி சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. 

பணிகள் முடிந்ததும் சரிவர பள்ளத்தை மூடாமல் மணலை கொட்டி விட்டு முடித்து விட்டனர். 

இதனால் இன்று மணல் ஏற்றி வந்த லாரி சரிவர மூடப்படாத சாலை பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

லாரியை மீட்கும் முயற்சியில் லாரி உரிமையாளர் ஈடுபட்டு வருகின்றார்.

செய்தியாளர்

S S K