அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 54ஆம் ஆண்டு தொடக்கவிழா .!

கிருஷ்ணகிரி

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 54ஆம் ஆண்டு தொடக்கவிழா .!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 54ஆம் ஆண்டு தொடக்கவிழா  காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் தமிழக முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அதிமுக துணை பொது செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கேபி.முனுசாமி BABL MLA ஆணைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் வழிகாட்டுதலின்படி

புரட்சித்தலைர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திரு உருவ படத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட கழக செயலாளர் KPM.சதீஷ்குமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர்  பையூர் ரவி, நகர செயலாளர் M.விமல்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உடன் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் நகர கழக நிர்வாகிகள்,கழக முன்னோடிகள், தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகிகள், கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ