காவேரிப்பட்டிணம் பேரூராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பேரூராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் மகேஸ்வரி, காவேரிப்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் ராணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ