திம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின்படி, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது .!

கிருஷ்ணகிரி

திம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின்படி, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது .!

திம்மாபுரம் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட  முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார், இதில் ஏராளமான மக்கள் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு மனுக்களை கொடுத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், திம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின்படி, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

காவேரிப்பட்டினம் திமுக ஒன்றிய செயலாளர்களான மகேந்திரன், தேங்காய் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை காவேரிப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் கலந்துகொண்டு தமிழக அரசின் சிறப்பு மிக்க திட்டங்களின் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

பின்னர் திம்மாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட  பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில் அரசு துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கலைஞரின் மகளீர் உரிமை தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கல்வி கடன், ரேசன் அட்டை  உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காணும் வகையில் மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினார்கள். மேலும் இந்த முகாமில் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளையும் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

மேலும் இந்த முகாமில் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கலைப் பிரிவு தலைவர் கோவிந்தசாமி, திம்மாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி செயலாளர்  உள்ளிட்ட அனைத்து துறை வாரியான அலுவர்களும் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ